சிந்துவுக்கு வெண்கலம் உறுதி

உலக பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் பி.வி.சிந்து 19 -21, 21-19, 21-15 என்ற செட் கணக்கில் ஆல் இங்கிலாந்து சாம்பியனான சீனாவின் ஷிக்ஸியான் வாங்கை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா தனது காலிறுதியில் 15-21, 15-21 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீராங்கனையான சீனாவின் லீ ஸியூரூயிடம் தோல்வி கண்டார்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE