மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் | இறுதிப் போட்டியில் அஸ்வினி, தனிஷா ஜோடி

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: குவாஹாட்டி மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

குவாஹாட்டியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடியானது நெதர்லாந்தின் டெபோரா ஜில்லே, செரில் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-12, 21-12 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோட் 12-21,14-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் லலின்ராட் சாய்வானிடம் தோல்வி அடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 18-21,15-21 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் ஹீ யோங் கை டெர்ரி, டான் வெய் ஹான் ஜெசிகா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE