ஸ்குவாஷ் தேசிய சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினர் வேலவன் செந்தில்குமார், அனாஹத்

By செய்திப்பிரிவு

சென்னை: 79-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான அரை இறுதி ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வேலவன் செந்தில் குமார் 11-7, 11-7. 11-8 என்ற நேர் செட்டில் ஹரிந்தர் பால் சிங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதியில் அபய் சிங் 11-6, 11-2, 11-3 என்ற செட் கணக்கில் சுராஜ் சந்தை வீழ்த்தினார். இன்று பிற்பகல் 3.40 மணி அளவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் வேலவன் செந்தில்குமார் - சுராஜ் சந்த் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

மகளிர் பிரிவு அரை இறுதியில் அனாஹத் சிங் 11-7, 11-3, 11-8 என்ற செட் கணக்கில் ஊர்வசி ஜோஷியை வீழ்த்தினார். மற்றொரு அரை இறுதியில் தன்வி கன்னா 11-1, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் ராதிகா சுதந்திர சீலனை தோற்கடித்தார். இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் அனாஹத் சிங் - தன்வி கன்னா மோதுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE