சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் தோல்வி

By செய்திப்பிரிவு

ஷென்ஸென்: சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக் ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினர்.

சீனாவின் ஷென்ஸென் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக் ஷயா சென் 19-21, 18-21 என்ற நேர் செட்டில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சீனாவின் ஷி யூகியிடம் தோல்வி அடைந்தார்.

24-ம் நிலை வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் 15-21, 21-14, 13-21 என்ற செட் கணக்கில் உலக சாம்பியனான தாய்லாந்தின் குன்லவுத் விதித்சரணிடம் வீழ்ந்தார்.

மற்றொரு இந்திய வீரரான பிரியன்ஷு ராஜாவத்தும் முதல் சுற்றை கடக்கவில்லை. அவர் 17-21, 14-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் கென்டா நிஷிமோடாவிடம் தோல்வி அடைந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE