‘இறுதிப் போட்டியை பார்க்க மாட்டேன்’: தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் ராப் வால்டர்

By செய்திப்பிரிவு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா இழந்தது. இதனால் 5-வது முறையாக நாக் அவுட் சுற்றுடன் அந்த அணி வெளியேறியது.

போட்டி முடிவடைந்ததும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் கூறும்போது, “உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பார்க்க மாட்டேன். இறுதிப்போட்டி குறித்து எனக்கு கவலை இல்லை. இருப்பினும், சொந்த மண்ணில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவது பொருத்தமானதாக இருக்கும். சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆஸ்திரேலியாவும் கோப்பையை வெல்லும் திறன் கொண்ட அணிதான்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE