குவாஹாட்டி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இந்நிலையில், நேற்று குவாஹாட்டி மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெறவிருந்தது.
ஆனால் கனமழை காரணமாக ஆட்டம் குறித்த நேரத்தில் தொடங்கப்படவில்லை. பின்னர் டாஸ் வீசப்பட்டது. டாஸில் வெற்றி பெற்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு
செய்வதாக அறிவித்தது.
ஆனால், தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆடுகளத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.
» ODI WC 2023 | மாட்டிறைச்சி உணவு வகைகளுக்கு 'நோ' அனுமதி - விமர்சித்த பாகிஸ்தான் ஊடகங்கள்
» ஆசிய விளையாட்டு போட்டி | ஆடவர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
ஆஸி.-நெதர்லாந்து: திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக அது நடத்தப்பட்டது.