பி.டி.உஷாவை நெருங்கிய வித்யா ராம்ராஜ்

By செய்திப்பிரிவு

இந்தியன் கிராண்ட் பிரீ 5 தடகள போட்டிகள் சண்டிகரில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் இலக்கை 55.43 விநாடிகளில் கடந்தார்.

இது 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்த இந்தியாவின் தங்க மங்கை என அழைக்கப்படும் பி.டி.உஷா கடந்த 55.42 விநாடிகளை விட 0.01 விநாடியே அதிகமாகும். நூலிழையில் பி.டி.உஷாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை வித்யா ராம்ராஜ் தவறவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE