சென்னையில் 11-ம் தேதி ஐஎடிஃஎப் டென்னிஸ் தொடர்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரசிடென்சி கிளப் சார்பில் சர்வதேச ஐடிஎப் மூத்தோர் டென்னிஸ் போட்டி சென்னையில் வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

4 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த தொடரின் ஆட்டங்கள் பிரசிடென்சி கிளப் மற்றும் எஸ்டிஏடி டென்னிஸ் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. 35, 45 மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த தொடரில் தென் இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் கலந்து கொள்கின்றனர்.

சர்வதேச டென்னிஸ் சங்கம், அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் இந்தப் தொடரின் மொத்த பரிசு தொகை ரூ.2.10 லட்சமாகும். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு தலைவர் கே.சிவராம் செல்வகுமார், போட்டி இயக்குனர் ஹிதன் ஜோஷி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE