துராந்த் கோப்பை | சாம்பியன் பட்டம் வென்றது மோஹன் பகான் கால்பந்தாட்ட அணி!

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: நடப்பு துராந்த் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மோஹன் பகான் அணி. இறுதிப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது அந்த அணி.

கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரையில் துராந்த் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. குரூப் சுற்று மற்றும் நாக்-அவுட் சுற்று என 42 போட்டிகள் நடைபெற்றன. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடர் கடந்த 1888-ல் தொடங்கியது. ஆசியாவில் நடைபெறும் பழமையான கால்பந்து தொடராக அறியப்படுகிறது.

நடப்பு தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மோஹன் பகான் வெற்றி பெற்றது. சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு துராந்த் கோப்பை பட்டத்தை அந்த அணி வென்றுள்ளது. பெட்ராடோஸ் (Petratos) அந்த அணிக்காக கோல் பதிவு செய்தார். கடைசியாக கடந்த 2000-மாவது ஆண்டு நடைபெற்ற தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது அந்த அணி. அதன் பிறகு 2004, 2009 மற்றும் 2019-ல் துராந்த் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது.

17 முறை சாம்பியன்: நடப்பு துராந்த் கோப்பை தொடரை வென்றதோடு சேர்த்து மொத்தமாக 17 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மோஹன் பகான். இதன் மூலம் இந்த தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாகவும் அந்த அணி திகழ்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்