கார் விபத்தில் கனடா வீராங்கனை உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கனடாவைச் சேர்ந்த ஃபிகர் ஸ்கேட்டிங் வீராங்கனையான அலெக்சாண்ட்ரா பால், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கனடாவைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா, அந்நாட்டின் சார்பில் சோச்சியில் 2014-ல் நடைபெற்ற போட்டியிலும், ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றவர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கார் விபத்தில் அவர் உயிரிழந்தார் என்று கனடா நாட்டு ஸ்கேட்டிங் அமைப்பு தெரிவித்துள்ளதாக கனடாவைச் சேர்ந்த ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

31 வயதான அலெக்சாண்ட்ரா பால் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் கனடா ஸ்கேட்டிங் அமைப்பு தெரிவித்துள்ளது.

2010-ல் நடைபெற்ற உலக ஜூனியர் ஃபிகர் ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற அலெக்சாண்ட்ரா பால், தொழில்முறை ஸ்கேட்டிங் போட்டிகளில் இருந்து 2016-ல் ஓய்வு பெற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE