கொழும்பு: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இந்த மூன்று போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, தொடரையும் வென்றுள்ளது. முதல் போட்டியை 142 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியை இறுதி ஓவரிலும் வென்றிருந்தது பாகிஸ்தான். நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்.
இதன் மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான். தற்போது பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு சிறப்பான பயிற்சி தொடராக அமைந்துள்ளது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடர்.
» ரியல்மி 11X 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
» ஹைதராபாத் | போட்டியில் பங்கேற்று விளையாடியபோது உயிரிழந்த செஸ் வீரர்
We have a new No.1 in the @MRFWorldwide ICC Men's ODI Team Rankings #AFGvPAK pic.twitter.com/VQEZxrSxxH
— ICC (@ICC) August 26, 2023
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago