சென்னை: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய அணி அசத்தியுள்ளது.
ஜப்பானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 5 - 0 என்று கோல் கணக்கில் வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. முன்னதாக, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதியில் ஆட்டத்தின் முதல் காலிறுதி நேரத்தில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
எனினும், இடைவேளைக்கு முன் இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் 19-வது நிமிடத்தில் ஒரு கோல், 23வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் மற்றும் 30வது நிமிடத்தில் மன்தீப் சிங் ஒரு கோல் என அடிக்க இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதேபோல் இடைவேளைக்கு பின் இந்தியாவின் சுமித் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்தி செல்வம் கார்த்தி கடைசி தலா ஒரு கோல் அடிக்க ஆட்ட நேர முடிவில் இந்தியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் மலேசியா அணியை இந்தியா எதிர்கொள்கிறது.