சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் www.icc-cricket.com என்ற இணையதளத்தில் வரும் 15-ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 25-ம் தேதி இந்தியா பங்கேற்காத பயிற்சி போட்டிக்கான டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ஆகஸ்ட் 30-ம் தேதி இந்திய அணி குவாஹாட்டி, திருவனந்தபுரத்தில் விளையாடும் 2 பயிற்சி ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். 31-ம் தேதி முதற்கட்டமாக இந்திய அணி மோதும் 3 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. இதில் சென்னையில் அக். 9-ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம், டெல்லியில் அக். 11-ம் தேதி இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம், புனேவில் அக். 19-ம் தேதி இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் ஆட்டங்கள் அடங்கும்.
2-வது கட்டமாக செப்டம்பர் 1-ம் தேதி இந்திய அணி பங்கேற்கும் 3 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. இதில் தரம்சாலாவில் அக். 22-ல் இந்தியா - நியூஸி. மோதும் ஆட்டம், லக்னோவில் 29-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக மோதும் ஆட்டம், மும்பையில் நவ. 2-ம் தேதி இலங்கைக்கு எதிராக மோதும் ஆட்டம் ஆகியவை அடங்கும்.
செப்டம்பர் 2-ம் தேதி 3-வது கட்ட டிக்கெட் விற்பனை நடைபெறும். இதில் கொல்கத்தாவில் நவம்பர் 5-ம் தேதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டம், பெங்களூருவில் நவம்பர் 12-ம் தேதி நெதர்லாந்துக்கு எதிராக இந்தியா மோதும் ஆட்டம் அடங்கும். அகமதாபாத்தில் அக். 14-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. செப்டம்பர் 15-ம் தேதி அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago