பிராக் ஓபன் டென்னிஸ் தொடர் | 2-வது சுற்றில் அங்கிதா

By செய்திப்பிரிவு

பிராக்: பிராக் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

செக்குடியரசின் பிராக் நகரில் மகளிருக்கான பிராக் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 33-ம் நிலை வீராங்கனையான பார்போரா ஸ்டிரைகோவாவுடன் மோதினார் 196-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் அங்கிதா ரெய்னா.

இதில் அங்கிதா ரெய்னா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். டபிள்யூடிஏ சுற்றுப்பயணத்தில் இந்த ஆண்டில் அங்கிதா ரெய்னா பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும். கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான ஆட்டத்தில் அங்கிதா ரெய்னா, செக்குடியரசின் லின்டா நோஸ்கோவாவுடன் மோதுகிறார். - பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE