கொரியா ஓபன் பாட்மிண்டன் | அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி

By செய்திப்பிரிவு

யோசு: கொரியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கொரியாவின் யோசு நகரில் நடைபெற்று வரும் 500 புள்ளிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் தகுரோ ஹோகி, யுகோ கோபயாஷி ஜோடியை எதிர்கொண்டது.

40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக், ஷிராக் ஜோடி 21-14, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE