‘தாழ்வில்லாமல் உயர்வில்லை’ - இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேச்சு

By செய்திப்பிரிவு

டொமினிகா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த அஸ்வின், டொமினிகாவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தி, உலக தரவரிசையில் தான் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துவது ஏன் என்பதை நிரூபித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும்போது, “இந்த உலகத்தில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரோ அல்லது மனிதரோ, தாழ்வுகள் இல்லாமல் உயர்ந்த நிலைக்குச் சென்றதில்லை. உங்களிடம் தாழ்வுகள் இருக்கும்போது, அது உங்களுக்கு இரண்டு விருப்பங்களைத் தருகிறது.

ஒன்று நீங்கள் துக்கப்படுவீர்கள் அல்லது அதைப் பற்றி பேசுவீர்கள்.பின்னர் அதைப் பற்றி புகார் செய்துவிட்டு அதனுடன் செல்வீர்கள். மற்றொன்று அதிலிருந்து கற்றுக்கொள்வது. நான் எனது தாழ்வுகளிலிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்கிறேன். சிறந்த தேடல்தான் என்னை எப்போதும் நல்ல நிலையில் வைத்திருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE