இந்திய கிரிக்கெட் அணியின் மன்னாதி மன்னன்: சவுரவ் கங்குலி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

By எல்லுச்சாமி கார்த்திக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று பிறந்தநாள். இதே நாளில் கடந்த 1972-ல் கொல்கத்தாவில் பிறந்தார். இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் என அறியப்படுகிறார்.

செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கங்குலி. சிறு வயதில் அவர் விரும்பி விளையாடியது கால்பந்து தான். அதில் அவருக்கு ஏதோ ஒரு வகையான ஈர்ப்பு இருந்துள்ளது. பத்தாம் வகுப்பு படித்த போதுதான் அவர் தொழில்முறை கிரிக்கெட் சார்ந்த பயிற்சியில் சேர்ந்துள்ளார். அது கூட அவரது மூத்த சகோதரரின் ஆதரவு இருந்த காரணத்தினால் தான். வலது கை பழக்கமுடைய அவர் இடது கையில் பேட் செய்து பழகினார். கிரிக்கெட்டில் அவர் திறனை மேம்படுத்த வீட்டில் மினி பயிற்சிக் கூடம் அப்போது அமைக்கப்பட்டது. முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் கோவர் தான் கங்குலியின் பேவரைட்.

படிப்படியாக உள்ளூர் அளவிலான கிரிக்கெட்டில் விளையாடி தனது திறனை நிரூபித்தார் கங்குலி. 1989-ல் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகம். 1990-91 ரஞ்சிக் கோப்பை சீசனில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம் பிடித்தார். 1992-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நான்கு ஆண்டு காலம் அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மீண்டும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஒரு ரவுண்டு வந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். அதே ஆண்டில் அணியின் தொடக்க ஆட்டக்காரராக மாறினார். சச்சின் டெண்டுல்கர், கேப்டன் பொறுப்பு வேண்டாம் என விலக 2000-மாவது ஆண்டில் அணியின் கேப்டன் ஆனார் கங்குலி. தனது கிரிக்கெட் கேரியரின் கடைசி கட்டத்தில் ஐபிஎல் களத்தில் விளையாடினார். அவரது தலைமையில் இந்திய அணி மறுமலர்ச்சி அடைந்தது. தனக்குப் பிறகான இந்திய அணியின் எதிர்காலத்தை அபாரமாக கட்டமைத்தார். அது அப்படியே இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கங்குலியின் சாதனைகள்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE