உலக டேபிள் டென்னிஸ் - அரை இறுதியில் மணிகா, சத்தியன் ஜோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக டேபிள் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா, சத்தியன் ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.\

துனிசியா நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, சத்தியன் ஜோடி, ஜெர்மனியின் செட்ரிக் மெய்ஸ்னர், யுவான் வான் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

21 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மணிகா பத்ரா, சத்தியன் ஜோடி 11-8, 11-3, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான ஆட்டத்தில் மணிகா பத்ரா, சத்தியன் ஜோடி கொரியாவின் ஷின் யூபின், லிம் ஜாங்ஹூன் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் 5-11, 6-11, 5-11 என்ற செட் கணக்கில் சீனாவின் லியாங் யானிங்கிடம் தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி 5-11, 9-11, 10-12 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மியு நாகசாகியிடம் வீழ்ந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE