சிஏபி இணை செயலர் ஆகிறார் கங்குலி

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) இணைச் செயலர் ஆகிறார் முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி.சிஏபியின் 82-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் கொல்கத்தாவில் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. அப்போது இணைச் செயலராக தேர்வு செய்யப்படுகிறார் கங்குலி. சிஏபியின் இணைச் செயலராக இருக்கும் சுஜன் முகர்ஜியின் 4 ஆண்டு பதவிக்காலம் இந்த மாதத்தோடு முடிவுக்கு வருகிறது.

மற்றபடி நிர்வாகிகளில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது சிஏபியின் தலைவராக இருக்கும் 74 வயதாகும் ஜக்மோகன் டால்மியா எவ்வித போட்டியுமின்றி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

சிஏபி தேர்தலில் போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்ய வரும் 19-ம் தேதி கடைசி நாளாகும். தற்போது இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றி வரும் கங்குலி, தனது பரிஷா ஸ்போர்ட்டிங் கிளப் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE