உலகக் கோப்பையில் விளையாடுகிறார் போல்ட்

By செய்திப்பிரிவு

வெலிங்டன்: அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து அணிக்கு டிரென்ட் போல்ட் திரும்ப உள்ளார்.

நியூஸிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் டிரென்ட் போல்ட். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக டிரென்ட் போல்ட் தேசிய அணிக்குத் திரும்புவார் என்று நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபரில் இந்தியாவில் தொடங்கவுள்ளது. வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு டிரென்ட் போல்ட், நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 12-வது பிக்பாஷ் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடவும் போல்ட் அனுமதியைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அவர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் தேசிய அணிக்காக விளையாடுவார்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE