மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா 4-ம் நாள்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 4-ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். பிரசித்திபெற்ற மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.23-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் சுவாமி, அம்மன் பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்து அருள் பாலிக்கின்றனர். 4-ம் நாள் நிகழ்ச்சியாக பாண்டிய மன்னர்களின் படை சேனாதிபதிகளாக இருந்த அழகப்ப பிள்ளை - தானப்ப பிள்ளை வகையறாக் களை கவுரவிக்கும் வகையில், வில்லாபுரம் பாகற்காய் மண்டகப் படியில் எழுந்தருள்வர்.

சிறப்பு அலங்காரத்தில் மீனாட் சி அம்மன் , பிரியாவிடை சுந்தரேசுவரர்.

அதன்படி நேற்று மாலை பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி மாசி வீதி வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளினர். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய் தனர். ஏப்.30-ல் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் மே 2-ம் தேதியும், மே 3-ல் தேரோட்டமும் நடைபெறும். மே 4-ம் தேதியுடன் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், துணை ஆணையர் ஆ.அருணாசலம் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE