ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் தேர் திருவிழா

By செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேச பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜரின் 1006-வது அவதரார திருவிழாவையொட்டி 9-ம் நாள் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில்பழமை வாய்ந்த ஆதிகேசவபெருமாள் மற்றம் ஸ்ரீபாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வருடம்தோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா மற்றும் ராமானுஜர் அவதார திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு 1006-வது ஆண்டு அவதார திருவிழா கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த 8 நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில்உற்சவர் ராமானுஜர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமானுஜர் அவதார திரு விழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம்நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்த உற்சவர் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை 7 மணிக்கு கிளம்பிய தேர், காந்தி சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வார் தெருவழியாகச் சென்று மீண்டும்நிலைக்கு வந்தது. இந்த விழாவில்எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை,இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த தேர் திருவிழவையொட்டி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம், பழங்கள், மோர், குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE