தஞ்சாவூரில் 1,000 ஆண்டு பழமையான பச்சைக் காளி, பவளக் காளி வீதியுலா புறப்பாடு

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெண்ணாற்றங்கரை கோடியம்மன் கோயில் உற்சவத்தையொட்டி பச்சைக் காளி, பவளக்காளி புறப்பாடு இன்று நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு தோறும்காளிகள் புறப்பாடு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கடந்த மாதம் 13-ம் தேதி, 21-ம் தேதி, 28-ம் தேதிகளில் காப்பு கட்டுதலும், நேற்று மாலை 6 மணிக்கு கோடியம்மன் கோயிலிலுள்ள 2 காளி உருவங்களையும் அதனை தூக்குபவர்களையும், திருநீறு நிரப்பிய 2 தனித்தனி கபாலத்துடன், மேலராஜவீதிக்கு அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, இன்று அதிகாலை 2 மணிக்கு மேலராஜ வீதியுள்ள சங்கரநாராயணன் கோயிலிருந்து பச்சைக் காளியும், கொங்கணேஸ்வரர் கோயிலிருந்து பவளக் காளிகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இன்று இரவு 9 மணிக்கு 2 காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து உறவாடுதலும், 6-ம் தேதி விடையாற்றியும், 7-ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், 9-ம் தேதி காப்பு அவிழ்த்தலும், 11-ம் தேதி இரவு இருப்பிடத்தல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜிராஜாபான்ஸ்லே, உதவி ஆணையர் கோ.கவிதா மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE