தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம், சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூசத்தை யொட்டி தீர்த்தவாரி இன்று (பிப்.4) நடைபெற்றது.
ஆறுபடை வீடுகளில் 4-ம் படைவீடான இக்கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு கடந்த 26-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்று, தொடர்ந்து விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வசந்த மண்டபம் எழுந்தருளினர். 27-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும், 3-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத்தை யொட்டி இன்று காலை வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிகள் 4 வீதிகளில் வீதியுலா சென்று, காவிரி ஆற்றுக்கு வந்தது. அங்கு அஸ்ரத் தேவருக்கு 21 வகையான மங்கலப் பொருட்களாக அபிஷேகம் நடைபெற்று, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு புனித நீராடினர்.
» தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாக திருக்கோயில்கள் பராமரிப்பு செலவுக்கு ரூ.3 கோடி அரசு மானியம் வழங்கல்
» “அவர் நன்றாகத்தான் இருந்தார்... தாயாகவே பழகுவார்” - வாணி ஜெயராம் வீட்டுப் பணியாளர் உருக்கம்
நாளை (5-ம் தேதி) சுவாமிகள் யதாஸ்தானம் திரும்புதல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
12 days ago
ஆன்மிகம்
12 days ago