வார ராசிபலன் 25-09-2014 முதல் 01-10-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியன், புதன், ராகு ஆகியோரும் சஞ்சரிப்பது சிறப்பாகும். எதிர்ப்புக்கள் குறையும். அரசு விவகாரங்களில் அனுகூலமான போக்கைக் காணலாம். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும்.

26-ம் தேதி முதல் சுக்கிரன் ஆறாமிடத்திற்கு மாறுவதாலும் 7-ல் சனி இருப்பதாலும் வாழ்க்கைத்துணை நலம் பாதிக்கும். கவனம் தேவை. பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. பயணங்களில் எச்சரிக்கை அவசியமாகும். வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டுத் தொடர்பு ஓரளவு பயன்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,செப்டம்பர் 25 (பிற்பகல்), 26.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்மேற்கு. .

நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம், வெளிர்கறுப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 5, 6, 9.

பரிகாரம்: பராசக்தியையும், மகாலட்சுமியையும் வழிபடுவது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.



ரிஷப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் சனியும் 11-ல் கேதுவும் உலவுவதால் மக்களால் அளவோடு நலம் உண்டாகும். மனத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படும். தொழிலாளர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள். எதிர்ப்புக்கள் இருக்கும், சமாளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்களுக்குத் தெளிவான சூழ்நிலை நிலவிவரும்.

பொருள் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் ஐந்தாமிடத்திற்கு மாறுவதால் ஸ்பெகுலேஷன் துறைகள் ஓரளவு லாபம் தரும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். 5-ல் சூரியனும் ராகுவும் இருப்பதால் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை தேவை. சனி பலம் பெற்றிருப்பதால் உழைப்பு வீண்போகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25 (பிற்பகல்), 26, 29.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை, நீலம்.

எண்கள்: 5, 6. 7, 8.

பரிகாரம்: துர்கை அம்மனை வழிபடவும். குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. வேதம் படித்தவர்களுக்கு உதவவும்.



மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 6-ல் செவ்வாயும் 10-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் நண்பர்கள், உறவினர்களால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். நிலம், மனை, வீடு, வாகனச் சேர்க்கை நிகழும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும். மனத்தில் துணிவு பிறக்கும். காரியத்தில் வெற்றி கிட்டும். வழக்கிலும், போட்டிகளிலும், விளையாட்டிலும் வெற்றி காணச் சந்தர்ப்பம் கனிந்துவரும்.

பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். 4-ல் சூரியனும் ராகுவும் இருப்பதால் அலைச்சல் சற்று அதிகமாகும். அதனால் உடல் சோர்வு ஏற்படும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் நான்காம் இடத்திற்கு மாறுவதால் கேளிக்கைகளில் ஈடுபாடு உண்டாகும். வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். சுப காரியச் செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25 (பிற்பகல்), 26, 29.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு..

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், பொன் நிறம், மஞ்சள்.

எண்கள்: 3, 6, 7, 9.

பரிகாரம்: துர்க்கைக்கும் ஆஞ்சநேயருக்கும் அர்ச்சனை செய்வது நல்லது.



கடக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் சூரியனும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். செவ்வாய் 5-ல் இருப்பது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் அவர் தன் சொந்த வீட்டில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதால் நலம் புரிவார். முன்னேற்றத்துக்கான நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு ஆதாயம் கூடும்.

மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வளர்ச்சி தெரியவரும். எதிர்ப்புக்கள் குறையும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடத்திற்கு மாறுவதால் தகவல் தொடர்பு துறையினர் ஏற்றம் பெறுவார்கள். தாய் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25 (பிற்பகல்), 26, 29.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, சாம்பல் நிறம், இளநீலம், ஆரஞ்சு....

எண்கள்: 1, 4, 6, 9.

பரிகாரம்: சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும். ஆஞ்சநேயருக்கும் விநாயகருக்கும் நெய்தீபம் ஏற்றவும். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யவும். .



சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் 3-ல் சனியும் 4-ல் செவ்வாயும் இருப்பதால் தோற்றப்பொலிவு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பண வரவு சற்று கூடும். சமுதாய நலப்பணிகளில் அக்கறை உள்ளவர்களுக்கு நற்பெயர் கிட்டும். தொழிலாளர்களது கோரிக்கைகளில் சில இப்போது நிறைவேறும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைத்துவரும். குடும்பத்தாரிடம் சுமுகமாகப் பழகிவருவது நல்லது.

வீண்வம்பு வேண்டாம். விஷ பயம் உண்டாகும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. ஏற்றுமதி-இறக்குமதி துறைகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். குரு 12-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் எச்சரிக்கை தேவை. மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். 26-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் பண வரவு சற்று அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25 (பிற்பால்), 26, 29.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, .

எண்கள்: 6, 8, 9.

பரிகாரம்: துர்க்கைக்கும், விநாயகருக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது. குரு பிரீதி செய்வதும் அவசியமாகும்.



கன்னி ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் 11-ல் குருவும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். போட்டிப் பந்தயங்களிலும், வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் வெற்றி காணலாம். பண நடமாட்டம் திருப்தி தரும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கும். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும்.

நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். சுப காரியச் செலவுகள் சற்று கூடும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். பொறியியல் துறை ஆக்கம் தரும். அலைச்சல் அதிகமாகும். தம்பதியினரிடையே வாக்குவாதங்கள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகவும். 26-ஆம், தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் தர்ம குணம் மேலோங்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25 (பிற்பகல்), 26, 29.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 6, 9.

பரிகாரம்: ராகு, கேது, சூரியன், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து வருவது நல்லது. திருமாலை வழிபடவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

14 days ago

ஆன்மிகம்

14 days ago

ஆன்மிகம்

14 days ago

மேலும்