திருப்பதி ஏழுமலையானை மே மாதம் தரிசிக்க டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் மே மாதம் தரிசனம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவுக்கான தேதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதன்படி பிப். 18-ம் தேதி காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை சுப்ரபாதம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டோர் 22-ம் தேதி நண்பகல் 12 மணிக்குள் அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட் பெறலாம். மே மாதத்தில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் வெளியாகிறது.

22-ம் தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண டோக்கன்களும், 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்களும் பிற்பகல் 3 மணிக்கு மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான டிக்கெட்களும் வெளியாக உள்ளன. 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை பெறலாம். மதியம் 3 மணிக்கு திருமலையில் தங்கும் அறைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

14 days ago

மேலும்