சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உதவ கேரள அரசின் ‘சுவாமி சாட்போட்’ செயலி: 24 மணி நேரமும் உதவிகள் பெற முடியும்

By செய்திப்பிரிவு

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்தர்​களுக்கு உதவும் வகையில், கேரள அரசு ‘சுவாமி சாட்​போட்’ என்ற பயண வழிகாட்டி செயலியை உருவாக்கி​யுள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: தமிழகத்​தில் இருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஆண்டு​தோறும் சென்று வருகின்​றனர். கடந்த ஆண்டு, சபரிமலைக்கு சென்ற தமிழகத்​தைச் சேர்ந்த பக்தர்கள் அடிப்படை வசதி​கள், பாது​காப்பு இன்றி சிரமப்​பட்​டதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டா​லின் உடனடி நடவடிக்கை எடுத்​தார். அதன்​படி, தமிழக தலைமைச் செயலர் பேசி​யதன் அடிப்​படை​யில், தமிழக ஐயப்ப பக்தர்​களுக்கு கேரளா​வில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்​கப்​படும் என்றும் பாது​காப்பு உறுதி செய்​யப்​படும் என்றும் கேரள தலைமைச் செயலர் உறுதி​யளித்​தார்.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டில், ஐயப்ப பக்தர்கள் தமிழகத்​தில் இருந்து சபரிமலை செல்​வ​தில் இடர்​பாடுகள் ஏதேனும் ஏற்பாடு​மானால், தமிழக ஐயப்ப பக்தர்​களுக்கு உதவும் வகையில் ‘சுவாமி சாட்​போட்’ (Swami Chatbot) எனும் வாட்ஸ் அப் செயலி உருவாக்​கப்​பட்​டுள்ளது என்றும், அதன் மூலம் 24 மணி நேரமும் உதவிகள் பெற முடி​யும் என்றும் தமிழக அரசுக்கு கேரள மாநில பத்தனம்​திட்டா ஆட்சியர் கடிதம் எழுதி​யுள்​ளார்.

பல்லா​யிரக்​கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்​தில் கூடு​வ​தால், எதிர்​பாராத வகையில் விபத்துகள் ஏதேனும் ஏற்படு​மானால் அல்லது அவசர உதவிகள் எதுவும் தேவைப்​பட்​டால் அத்தகைய தருணங்​களில் ‘சுவாமி சாட்​போட்’ எனும் பயண வழிகாட்​டியை கைபேசி எண் 6238008000 மூலம் Hi என குறுஞ்​செய்தி அனுப்​பினால், உதவிகள் உடனே கிடைக்​கும். அதாவது, காவல்​துறை, தீயணைப்பு சேவை​கள், மருத்துவ உதவி​கள், வன அதிகாரி​கள், உணவு பாது​காப்​புக்கான அவசர தொலைபேசி எண்களை​யும் பெற்றுக் கொள்ள முடி​யும். இது அவசர நேரங்​களின்​போது உடனடி சேவைகளை பக்தர்​களுக்கு அளிக்​கிறது.

மேலும், இந்த ‘சுவாமி சாட்​போட்’ வாயிலாக சபரிமலைக்​குச் செல்​லும் தமிழக பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்​கும் நேரங்​கள், பூஜை நேரங்​கள், அருகிலுள்ள கோயில்​கள், தங்குமிடங்​கள், உணவகங்​கள், விமான நிலை​யம், ரயில் நிலை​யம், பேருந்து நிலை​யங்கள் ஆகிய தகவல்​களை​யும், கேரள மாநில அரசு போக்கு​வரத்​து கழக பேருந்​துகள் வந்து செல்​லும் நேரங்​களை​யும் எளிதில் அறிந்து கொள்ள முடி​யும்.

சபரிமலைக்கு மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் வருகை தரும் தமிழகத்​தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்​கள், குறித்த காலத்​தில் வந்து செல்​வதற்கு ஏற்ற வசதி​களை​யும், பாது​காப்பு மற்றும் கோயில் தொடர்பான சேவை​களை​யும் இந்த ‘சுவாமி சாட்​போட்” எளிதில் வழங்​கு​கிறது. தமிழகத்​தில் இருந்து சபரிமலைக்​கு செல்​பவர்​கள் இந்த ​விவரங்களை அறிந்​து​கொண்டு சிரமம் இல்​லாமலும், பாது​காப்​பாக​வும் சென்று வரலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

14 days ago

ஆன்மிகம்

14 days ago

ஆன்மிகம்

14 days ago

ஆன்மிகம்

15 days ago

மேலும்