திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 2-ம் தேதி தொடக்கம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் நவம்பர் 2-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.

விழாவின் முதல்நாளான நவ. 2-ம் தேதி அதிகாலை ஜெயந்திநாதப் பெருமான் யாகசாலைக்கு எழுந்தருள்கிறார். அன்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பகல் 2.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருகிறார். மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து கிரி வீதி வழியாக உலா வந்து திருக்கோயிலை சேர்கிறார்.

நவ. 7-ம் தேதி மாலை கோயில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி, சூரனை வதம் செய்கிறார். வரும் 8-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

17 days ago

ஆன்மிகம்

17 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

20 days ago

மேலும்