நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ரங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை: திரளான பக்தர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருச்சி: நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ரங்கநாச்சியார் திருவடி சேவை நேற்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் அக். 4-ம் தேதிதொடங்கியது. இதையொட்டி, ரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து தினமும் மாலை புறப்பட்டுகொலு மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

நவராத்திரி உற்சவத்தின் 7-ம்திருநாளான நேற்று தாயார் திருவடி சேவை நடைபெற்றது. இதையொட்டி, ரங்கநாச்சியார் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து தனது திருவடிகளை பக்தர்களுக்கு காட்சியளித்தவாறே புறப்பட்டு கொலுமண்டபம் வந்தடைந்தார். இரவு 7.30 மணிக்கு கொலு தொடங்கி இரவு 9.30 மணிக்கு நிறைவடைந்தது. அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரங்கநாச்சியார் புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாயாரின் திருவடிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தாயார்திருவடியை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் தலைமையிலான பணியாளர்கள் செய்திருந்தனர். நவராத்திரி உற்சவம் நாளை (அக்.12) நிறைவடைகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

21 hours ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்