ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

By செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும்டிசம்பரில் ஆர்ஜித சேவைகள் மூலம் தரிசனம் செய்வதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இதில் நேற்று காலை 10 மணிக்கு குலுக்கல் முறை மூலம்சென்று தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் வெளியானது. நாளை 20-ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருக்கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் வரும் 21-ம்தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. 23-ம் தேதி காலை 10மணிக்கு அங்கபிரதட்சண டோக்கன்களும், 24-ம் தேதி ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களும் வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE