கார்முகில் வண்ணர் கோயிலில் 26-ல் கிருஷ்ண ஜெயந்தி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தியாகராய நகரில் மாம்பலம் நெடுஞ்சாலை லாலா தோட்டத்தில் உள்ள ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கார்முகில் வண்ணப் பெருமாள் கோயிலில் ஆக.26-ம் தேதி 29-ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு அன்றைய தினம் காலை 6.30 மணி முதல் திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம், சாற்றுமுறை, மங்கலஹாரத்தி ஆகியன நடைபெற உள்ளன.

மாலை 6 மணி அளவில் வழுக்கு மரம் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 7.30 மணி அளவில் கோதண்ட ராமானுஜதாசரின் சிஷ்யர் கிருஷ்ண ராமானுஜ தாசர் பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சியுடன் ஸ்ரீ கார்முகில் வண்ணர், ருக்மிணி -சத்யபாமாவுடன் புறப்பாடு கண்டருள உள்ளார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவுரவத் தலைவர் எம்.நரசிம்மன், தலைவர் மெக்கானிக் வி.மோகன், துணைத் தலைவர் இ.சீனிவாசன், செயலர்கே.சாணக்ய பாபு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE