முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்யும் அவகாசம் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வெளியிட்ட அறிக்கை:

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆகஸ்ட் 24, 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கவும், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.

மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கவிரும்புவோர் ஜூலை 10-ம் தேதிக்குள்சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தியா மற்றும்பல்வேறு நாடுகளில் இருந்து 1,003 ஆய்வுகட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மேற்கண்ட இணையதளத்தில் ஜூலை 15-ம் தேதிக்குள்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசத்தை நீட்டிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

அதன் அடிப்படையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான அவகாசம்ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE