காரைக்கால்மேடு ரேணுகாதேவி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

By செய்திப்பிரிவு

காரைக்கால்: காரைக்கால் மேடு ரேணுகா தேவி அம்மன் கோயிலில் நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.

காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவக் கிராமத்தில் சிறப்பு மிக்க ரேணுகா தேவி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குடமுழுக்கு, மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெற்றதையொட்டியும், சுனாமி போன்ற பேரழிவு வராமல் மக்களை காக்க வேண்டியும், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் உத்திரம் நட்சத்திர நாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு, நேற்று நடைபெற்ற நிகழ்வில், சித்தி விநாயகர் கோயிலிலிருந்து நூற்றுக் கணக்கானோர் பால் குடம் எடுத்து ஊர்வலமாக ரேணுகா தேவி அம்மன் கோயிலுக்குச் சென்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு மீனவக் கிராமங்களிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை காரைக்கால் மேடு மீனவக் கிராம பஞ்சாயத்தார் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE