கார்த்திகை சோமவாரத்தையொட்டி சிவன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் @ விருதுநகர்

By செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகர் மேலரத வீதியில் 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசொக்க நாதர் உடனுறை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயில் உள்ளது. இங்கு கார்த்திகை முதல் சோமவாரத்தை யொட்டி, உலக நன்மைக்காக ஆயிரத்து 8 சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

கோயில் வளாகத்தில் லிங்க வடிவில் ஆயிரத்து 8 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சங்கு பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

அதையடுத்து மூலவருக்கு ஆயிரத்து 8 சங்கு களில் புனித நீர் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் சொக்க நாதர் அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE