திருவண்ணாமலையில் ‘வாழும் கலை’ அமைப்பின் ஆசிரமம் நவ.23-ல் திறப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: திருவண்ணாமலையில் ‘வாழும் கலை’ அமைப்பின் ஆசிரமம் வரும் வியாழக்கிழமை (நவ.23) முதல்முறையாக திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் அவ்வமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்துகொள்கிறார் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வாழும் கலை அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலகெங்கிலும் 180 நாடுகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான சேவையுடன், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் ஆன்மிக தளத்தில் செயல்படுகிறது வாழும் கலை அமைப்பு. தமிழகத்தில் முதல் முறையாக திருவண்ணாமலையில் ஆன்மிக நல்வாழ்வை வளர்ப்பதற்கும், பழங்கால மரபுகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக வாழும் கலை ஆசிரமத்தை திறக்கப்படுவதை பெருமையுடன் அறிவிக்கிறது.

"வாழும் கலை" என்ற பதாகையின் கீழ் நிறுவப்படும் இந்த ஆசிரமம், தியான வகுப்புகளை வழங்குவதற்கும், வேத பாடசாலையின் துவக்கத்தின் மூலம் வேத ஞானத்தின் வேர்களை வளர்ப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் வாழும் கலையின் ஆசிரமத்தை ,வருகின்ற நவம்பர் 23 அன்று காலை 10:30 மணியளவில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஆசிரமத்தின் திறப்பு விழாவை நடத்துகிறார். திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமம் மூன்று நோக்கங்களுடன் நிறுவப்பட்டது:

வாழும் கலை என்பது ஒரு உலகளாவிய லாப நோக்கற்ற அமைப்பாகும். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் பல கோடி மக்கள் ஆன்மீக அனுபவங்களைப் பெற்று வாழும் கலையை அறிந்து மேம்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE