ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்: நாமக்கல் வட்ட பள்ளிகளுக்கு நவ.1-ல் விடுமுறை

By செய்திப்பிரிவு

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, நவ.1-ம் தேதி நாமக்கல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா வரும் 30, 31 மற்றும் 1-ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்க வுள்ளனர்.

இதையொட்டி, நாமக்கல் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி, மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும், நவ.1-ம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE