வேப்பனப்பள்ளி அருகே கீரம்மா கோயிலில் சிறப்பு பூஜை

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: இரு மாநில மக்களின் நட்புறவுக்காக, வேப்பனப்பள்ளி அருகே உண்டிகை நத்தம் கீரம்மா கோயிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

இதையொட்டி, நேற்று காலை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. இதில், வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டிகை நத்தம், அரியனப் பள்ளி, வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிக் மக்கள்

மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஓ.என் கொத்துர், சீனிவாசபுரம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE