ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா: செப்டம்பர் 17-ம் தேதி கொடியேற்றம்

By செய்திப்பிரிவு

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் புரட்டாசி மாதப் பெருவிழா வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசிப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு விழா வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வரும் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பெருமாள், தாயாருடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. பிரதான நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 25-ம் தேதி காலை நடைபெறுகிறது.

அதேபோல, வரும் 26-ம் தேதி மூலவர் திருமஞ்சனம், சப்தாவரணம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை உதவி ஆணையர் சாந்தா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE