ஜூலை 29-ல் மொஹரம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஜூலை 29-ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிவிப்பில், ‘‘துல்ஹஜ் மாதம் 29-ம் தேதி (ஜூலை 18) மாலை மொஹரம் மாத பிறை சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் ஜூலை 20-ம் தேதி மொஹரம்மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் யொமே ஷஹாதத், ஜூலை 29 ஆகும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE