சிறுதானிய நொறுவை: தேங்காய்ப் பால் கறிவேப்பிலை கீர்

என்னென்ன தேவை?

அடர்த்தியான தேங்காய்ப் பால் - ஒரு கப்

இளநீர் வழுக்கை (பொடியாக நறுக்கியது) - கால் கப்

கறிவேப்பிலை - கால் கப்

வெல்லம் - ருசிக்கேற்ப

தேன் - 2 டீஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி – தலா கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

சிறிது தேங்காய்ப் பாலுடன் கறிவேப்பிலையை அரைத்துச் சேருங்கள். அதனுடன் இளநீர் வழுக்கை, வெல்லம், தேன், ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தால் தேங்காய்ப்பால் கறிவேப்பிலை கீர் தயார்.


பார்வதி கோவிந்தராஜ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE