பிரபாஸின் ‘சலார்’ சனிக்கிழமை ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படம் நாளை (சனிக்கிழமை) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘சலார்’ பார்ட் 1: சீஸ்பயர்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இந்தப்படம் கடந்த டிச.22-ம் தேதி பான் இந்தியா முறையில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் நாளிலேயே அதிகப் பட்ச வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை பெற்றது. இந்தப் படம் 17 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.400 கோடி வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலித்துள்ளது.

இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரிலீஸுக்கு முன்பே பெரும் தொகைக்கு கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், ‘சலார்’ படம் இன்று (ஜன.19) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் படத்தில் ஒடிடி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் நாளை (ஜன.20) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE