ஜெயம் ரவியின் ‘இறைவன்’ வியாழக்கிழமை ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

ஜெயம் ரவி நடித்துள்ள ‘இறைவன்’ திரைப்படம் நாளை (அக்டோபர் 26) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு நயன்தாராவும் ஜெயம் ரவியும் இதில் மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.

இதனால் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.15 கோடி அளவில் வசூல் ஈட்டியதாக தகவல் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் வெளியீட்டில் தாமதமானதால் ‘அவுட் டேட்’ ஸ்கிரிப்ட் என விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் அக்டோபர் 26-ம் தேதியான நாளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE