மகேஷ்பாபுவின் ‘குண்டூர் காரம்’ பிப்.9-ல் ஓடிடியில் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: மகேஷ் பாபு நடித்துள்ள ‘குண்டூர் காரம்’ திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஆல வைகுந்தபுரமுலோ’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவரது இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ‘குண்டூர் காரம்’ படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் எமோஷ்னல் என்டர்டெயின்மென்ட்டாக உருவாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும் மகேஷ்பாபு படங்களில் அதிகபட்ச ஓபனிங் கொண்ட படம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தெலுங்கு தவிர, மலையாளம், தமிழ், இந்தி, கன்னட மொழிகளிலும் காண முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE