நயன்தாராவின் ‘அன்னபூரணி’ டிச.29-ல் ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படம் வரும் டிசம்பர் 29-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘அன்னபூரணி’. நயன்தாரா, நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

தமன் இசை அமைத்துள்ளார். நயன்தாராவின் 75-வது படமாக உருவான இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் மெதுவாக நகரும் திரைக்கதை மற்றும், பலவீனமான காட்சிகளாலும் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் வரும் டிசம்பர் 29-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE