துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கொத்தா’ செப்.29-ல் ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

துல்கர் சல்மான் நடித்துள்ள ‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படம் செப்டம்பர் 29-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சாக்லேட்’ பாயான நடிகர் துல்கர் சல்மான் ‘ரக்கட்’பாயாக அவதாரமெடுத்த திரைப்படம் ‘கிங் ஆஃப் கொத்தா’. அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இப்படத்தில், பிரசன்னா, செம்பன் வினோத், ஷபீர், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய், ஷான் ரஹ்மான் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். பீரியட் ஆக்‌ஷன் டிராமாவாக உருவான இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பலவீனமான திரைக்கதையால் எதிர்மறை விமர்சனங்களை படம் எதிர்கொண்டது. இதனால், ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.35 கோடியை வசூலிக்கவே போராடியது. இதற்கான புரமோஷனுக்காக நடிகர் துல்கர் சல்மான் தமிழ்நாடு, ஹைதராபாத் என சுழன்றடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 29-ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும், படத்தை மலையாளம் தவிர்த்த தென்னிந்திய மொழிகளிலும் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE