திண்டுக்கல்லில் நடந்த வாசகர் திருவிழாவுக்கு வத்தலகுண்டுவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வெங்கடேசன், காலை 7 மணிக்கே முதல் நபராக வந்திருந்தார். அவர் `தி இந்து'வில் வெளியான முக்கிய கட்டுரைகளை எடுத்து வந்திருந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில் வாசகர்கள் நத்தம் அமானுல்லா, சுகாதாரத் துறையில் இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் இளங்கோவன், தோல் மருத்துவர் ஹர்ஷவர்ஷினி, திண்டுக்கல் தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர் சுந்தர்ராஜன், விவசாயி அமல்தாஸ் ஆகியோர் பேசினர்.