‘அழிவுக்கு யார் பொறுப்பு?’ கட்டுரையின் தலைப்பே மிக முக்கியமான கேள்வியை நம் முன்வைக்கிறது. எல்லாவற்றையும் காசால் அடித்து விட முடியும் என்று எண்ணும் அதிகாரவர்க்கம் விளிம்புநிலை மக்களின் வாழ்வா தாரத்தை உயர்த்த முயற்சிப்பதே இல்லை.
இழப்புகள் நேரும்போது மட்டும் எதையாவது இட்டு நிரப்ப முயற்சிக்கிறது.
சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களால், அதிகாரவர்க்கத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதால்தான் அலட்சியம் தொடர்கிறது. ஒரு சமூகத்தில் படித்தவர்கள் எந்த அளவுக்கு விழிப்புணர்வோடும், சமூக அக்கறையோடும் பங்கேற்கிறார்களோ, அப்போதுதான் அதிகாரவர்க்கத்தின் இறுகிய பிடி தளரும்.
அதிகார வர்க்கத்தை அசைத்துக் காட்ட முடியும். மாற்றத்துக்கு முயல்வோம்.
- மு. செல்வராஜ்,மதுரை.