நெகிழ வைக்கும் ‘515’ கணேசனைப் பற்றிய செய்தி படித்தேன். அவர், மனித நேயத்தின் மறுஉருவம். தன் வயிற்றுப் பிழைப்புக்குத் துருப்பிடித்த பழைய இரும்பு வியாபாரம் செய்தாலும், ஏழை வீட்டு சவத்தை இலவசமாக எடுத்துச் செல்லும் அவருடைய பணி போற்றுதலுக்குரியது’. விபத்து வேளையிலும் பிரசவ நேரத்திலும் போராடும் எளிய மக்களிடம், எதையும் எதிர்பார்க்காமல் தொண்டு செய்யும் கணேசனைப் பாராட்டுகிறேன்.
- கி. நாவுக்கரசன்,ராணிப்பேட்டை.