ஹாத்ரஸ் பாலியல் வன்முறைச் சம்பவம் தொடர்பான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை எனக் கூறியிருக்கும் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நால்வரில் ஒருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை அளித்து மற்றவர்களை விடுவித்திருக்கிறது. இத்தீர்ப்பு, மகளிர் தினக் கொண்டாட்டத் தருணத்தில் வெளியாகியிருப்பது ஒரு காலமுரணாகவே பார்க்கப்படுகிறது.
2020 செப்டம்பர் 14 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள பூல்கரி கிராமத்தில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணை, ஆதிக்க சாதியைச் சேர்ந்த நான்கு பேர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன், அப்பெண்ணின் நாக்கை அறுத்து முதுகெலும்பை உடைத்ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்