மாநில மொழியில் தீர்ப்பு: பரவலாக்கப்பட வேண்டிய முன்னெடுப்பு!

By செய்திப்பிரிவு

இந்தியாவிலேயே முதன்முறையாக, கேரள உயர் நீதிமன்ற இணையதளத்தில் இரண்டு தீர்ப்புகள் மலையாளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது பாராட்டத்தக்க நடவடிக்கை. உலகத் தாய்மொழி தினமான பிப்ரவரி 21 அன்று, இந்தத் தீர்ப்புகள் வெளியிடப்பட்டிருப்பதன் மூலம், மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குக் கேரள உயர் நீதிமன்றம் பெருமை சேர்த்திருக்கிறது.

அனைத்து உயர் நீதிமன்றங்களின் ஆணைகளும் உத்தரவுகளும் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்பதும், வழக்காடு மொழியாக மாநில மொழி அனுமதிக்கப்பட வேண்டும் என்பதும் நீண்ட நாள்களாகவே இருந்துவரும் கோரிக்கைதான். சென்னை உயர் நீதிமன்றம் தமிழில் தீர்ப்புகளை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE